Wednesday, March 27, 2013

வினாவங்கி - இரண்டாமாண்டு நான்காம் பருவம்

தமிழ் வினாவங்கி - இரண்டாமாண்டு - நான்காம் பருவம் - CLA4D


இரண்டாமாண்டு நான்காம் பருவம் - பொதுத்தமிழ் பயிலும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம், தேர்வு நெருங்கி விட்டது, நீங்கள் அதிக மதிப்பெண்களைப் பெறும் பொருட்டு முனைப்புடன் படித்து வருவீர்கள் என்பது தெரியும். அதற்கு பெரிதும் துணைநிற்பது முந்தைய தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேள்விகள் எப்படி கேட்கப்பட்டுள்ளன என்பதை ஆய்ந்து படிக்கும் முறையாகும். இங்கு உங்கள் வசதிக்காக முந்தைய பல்கலைக்கழகத் தேர்வுகளில் கேட்கப்பட்டக் கேள்விகளை தொகுத்தளித்துள்ளேன். அவற்றிற்கான விடைகளைத் தயார் செய்து மீண்டும் மீண்டும் படித்து தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
    மு.தியாகராஜ்
தமிழ்த்துறைத்தலைவர்
குருநானக் கல்லூரி (சுழற்சி-2)

        தமிழ் அடித்தளப்படிப்பு - தாள்-4
வினாத்தாள் அமைப்பு முறை - வினாக்கள் பகிர்வு
பாடம்                    பகுதி-    பகுதி-   பகுதி-   
செய்யுள்                     5           3           2    
இலக்கணம்                  3           -           -    
நாடகம்                       -          2           1    
இலக்கிய வரலாறு          4           2           1    
மொழிபெயர்ப்பு              -           -           1    
மொத்தம்                    12          7           5    
           10*2=20     5*5=25      3*10=30    
குருநானக் கல்லூரி (சுழற்சி - 2)
தமிழ்த் துறை
தமிழ் வினா வங்கி - இரண்டாமாண்டு
நான்காம் பருவம்  - CLA4D
நேரம்: 3 மணிநேரம்                                        மதிப்பெண்கள்: 75
பகுதி- :                                                            (10*2=20)
(2 மதிப்பெண் கேள்விகள்)
(2 மதிப்பெண் வினாக்கள் 12 கொடுக்கப்பட்டு 10 க்கு விடையளிக்க வேண்டும்)
    1.   பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பு எப்பேற்பட்டது என்கிறாள் தலைவி? (april 2012)
    2.   குறிஞ்சித் தலைவி தலைவனுடனான நட்பின் அளவு குறித்துக் கூறுவன யாவை? (april 2011)
    3.   ’கொங்குதேர் வாழ்க்கை’ எனத்தொடங்கும் குறுந்தொகைப் பாடல் யார் கூற்றாக அமைந்துள்ளது? இப்பாடலைப் பாடிய புலவர் யார்? (Nov 2012)
    4.   “எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” – யார் கூற்று? (april 2012)
    5.   குறுந்தொகைத் தலைவியின் நட்பு எத்தகையது? (Nov 2011)
    6.   குறுந்தொகை காட்டும் குரங்கின் தன்மையை விளக்குக. (Nov 2011)
    7.   மடலேறுதல் என்றால் என்ன? (Nov 2011)
    8.   அன்புடை நெஞ்சம் ஒன்று சேர்வதற்குக் குறுந்தொகைப் பாடல் கூறும் உவமை எது? (Nov 2010)
    9.   பண்பெனப்படுவது யாது? (Nov 2010)
    10. கல்லா வன்பறழ் – பொருள் கூறுக. (Nov 2010)
    11.  நீயாகிரென் கணவனை
யானகியர் நின் நெஞ்சுநேர்பவளே – இடம்சுட்டிப் பொருள் விளக்கம் தருக. (Nov 2010)
    12.  செம்புலப்பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே – விளக்குக. (Nov 2012)
    13.  “யானை வேட்டுவன் யானையும் பெறுமே” – இடஞ்சுட்டி பொருள் விளக்குக. (april 2012) (april 2011)
    14. கோப்பெருஞ்சோழனின் சிறப்பு யாது? (Nov 2011)
    15.  பிசிராந்தையார் ‘எம் கோ’ என்று யாரைக் குறிப்பிட்டுப் பெருமையடைகிறார்? (Nov 2010)
    16.  உயிரின் பாதுகாவலன் எனக் கோப்பெருஞ்சோழன் யாரைக் கூறுகிறார்? (Nov 2011)
    17. பாலைவழியில் செல்லும் அந்தணர் தோற்றத்தைப் பாலைக்கலி வழி எடுத்துரைக்க. (april 2011)
    18.  பாலைத்திணை குறித்து விளக்குக. (Nov 2010)
    19.  உமணர் என்பவர் யார்? (Nov 2011)
     20. ’நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று’ – இடம் சுட்டிப் பொருள் தருக. (Nov 2012)
    21.  ”இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடிஇச் சென்றனள்”- விளக்குக. (april 2012)
    22. பட்டினப்பாலை, காவிரி ஆற்றை எத்தைகைய சிறப்புடையது என்கிறது. (april 2012) (april 2011)
    23. பட்டினப்பாலை எத்துறையில் பாடப்பட்டுள்ளது பாடியவர் யார்? (Nov 2012)
    24. பொருள் வயிற்பிரிவு என்றால் என்ன?
    25. பொருண்மொழிக் காஞ்சி என்றால் என்ன? (april 2012)
    26. பாடாண்திணை- குறிப்பு வரைக. (Nov 2012)
    27. இயன்மொழித்துறை என்றால் என்ன? (april 2011) (Nov 2012) (Nov 2011) (Nov 2010)
    28. வஞ்சித்திணை – விளக்கம் தருக. (april 2011)
    29. பொதுவியல் விளக்கம் தருக. (april 2012)
    30. நெய்தல் திணை என்றால் என்ன? (april 2012) (april 2011)
    31.  கலித்தொகை எத்தகைய பாவினால் ஆன நூல்? (april 2011)
    32. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல்கள் எவ்வளவு? (Nov 2010)
    33. ஆற்றுதல் என்பது யாது? (Nov 2012)
    34. பட்டினப்பாலை எந்தத்துறையில் பாடப்பெற்றுள்ளது? (april 2012)
    35. பட்டினப்பாலையின் பாட்டுடைத்தலைவன் யார்? (Nov 2010)
    36. சேரமன்னர்களைச் சிறப்பித்துக் கூறும் எட்டுத்தொகை நூல் எது? (april 2012) (april 2011)
    37. நல்ல குறுந்தொகை – குறிப்பு வரைக. (april 2012)
    38. எட்டுத்தொகை நூல்களுள் அகம் பற்றிய நூல்கள் இரண்டினைக் குறிப்பிடுக. (Nov 2012)
    39. சிறுபாணாற்றுப்படை – குறிப்பு வரைக. (Nov 2012)
    40. சிறுபாணாற்றுப் படையினைப் பாடியவர் யார்? (Nov 2010)
    41. முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது? (Nov 2010)
    42. புறநானூறு குறிப்பு வரைக. (Nov 2010)
    43. பரிபாடல் குறிப்பு வரைக. (april 2011)
    44. புதுமைப் பித்தன் எழுதிய இரண்டு சிறுகதைகளைக் குறிப்பிடுக. (april 2012)
    45. நாடகத்தமிழ் குறித்துக் குறிப்பிடும் இரு நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக. (april 2011)
    46. தமிழ் நாடகத்தந்தை எனப்படுபவர் யார்? (Nov 2011)
    47. மனோன்மணிய நாடகம் எந்த நூலைத் தழுவி எழுதப்பட்டது? (Nov 2012)
    48. வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றை வெளிப்படுத்தும் நாடகம் எது? அதை எழுதியவர் யார்? (Nov 2012)
     49. பாண்டியன் பரிசின் ஆசிரியர் யார்? (Nov 2011)
  50. பத்துப்பாட்டில் அடிஅளவில் மிகப்பெரிய நூல் எது? மிகச்சிறிய நூல் எது? 

     (5 மதிப்பெண் கேள்விகள்)
  பகுதி- :                                                         (5*5=25)
  (5 மதிப்பெண் வினாக்கள் 7 கொடுக்கப்பட்டு 5 க்கு விடையளிக்க வேண்டும்)
1.   பிசிராந்தையார் வருவார் என்று கோப்பெருஞ்சோழன் கூறிய கருத்துக்களை எழுதுக. (april 2012) (april 2011)
2.   கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது மொழிந்தது என்னும் கருத்துடன் பாடிய பாடலை விளக்குக. (Nov 2012)
3.   கோப்பெருஞ்சோழனின் நட்பு எத்தகையது? (Nov 2011)
4.   கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் பற்றி கூறுவனவற்றை எழுதுக.
5.   நும் பாடப்பகுதியில் உள்ள பாடாந்திணைப் பாடல் கருத்துகளை விளக்குக. (Nov 2011)
6.   நும் பாடப்பகுதியில் உள்ள முல்லைத் திணையிலமைந்த குறுந்தொகைப் பாடற்பொருளை விளக்குக.
7.   புல்லாற்றூர் எயிற்றியனார் பாடல் கருத்துகளை எழுதுக. (Nov 2011)
8.   “கொங்குதேர் வாழ்க்கை…” என்று தொடங்கும் குறுந்தொகைப் பாடல் செய்தியை விளக்குக. (april 2012)
9.   தலைவியின் நாணத்தைத் தலைவன் எவ்விதம் போக்கினான்? (Nov 2011)
10. கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே – இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக. (Nov 2011)
11.  குறுந்தொகையில் பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடிய பாடலில் ‘மனை இனிமை தருமா?’ என்று தோழி ஏன் வினவுகின்றாள்? (april 2011)
12.  ’அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து’ எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடலின் பொருளைச் சுட்டுக. (Nov 2012)
13.  குறுந்தொகை – குறிப்பு வரைக. (Nov 2012)
14. தோழி கூற்றுப்பாடல்களின் கருத்துகளைக் குறுந்தொகைப் பாடல்களின் மூலம் விளக்குக. (Nov 2011)
15.  கலித்தொகை வழி உடன்போக்குச் சென்ற தலைவியின் நிலையைக் குறிப்பிடுக. (april 2012)
16.  தலைவியைக் கண்டீரா’ என்று வினவிய செவிலிக்கு முக்கோற்பகவர் கூறிய அறிவுரைகள் யாவை? (Nov 2010)
17. பாலைக்கலிப் பாடலில் உடன்போக்கில் சென்ற தலைவி சிறந்த கற்புடையவள் என்று அந்தணர்கள் கூறும் கருத்துக்களைத் தொகுத்துரைக்க. (april 2011)
18.  நெய்தற்கலியில் தோழி, தலைவனைத் தெருட்டி உரைத்த அறிவுரைகளை எழுதுக. (Nov 2012)
19.  பட்டினப்பாலை காட்டும் இரவு நேரக்காட்சிகளைப் புலப்படுத்துக. (april 2012)
20. காவிரியாறு பட்டினப்பாலையில் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டுள்ளது? (Nov 2010)
21.  புகாரில் விளங்கும் அறம்பொருந்திய அட்டிற் சாலைகளை விளக்குக.
22. அன்னம் கூறும் பேழையின் அடையாளத்தைக் குறிப்பிடுக. (april 2012)
23. பாண்டியன் பரிசில் வீரப்பன் தோழர்களிடம் கூறும் தன் வரலாற்றை எழுதுக. (april 2012)
24. ஆத்தாக்கிழவி அன்னத்தைக் காப்பாற்றும் திறத்தினை எடுத்துரைக்க.
25. அகநானூற்று நூல் அமைப்பினை எடுத்துக்காட்டுக. (april 2012)
26. ஆத்தா கிழவியின் பண்புகளைச் சுட்டுக. (Nov 2012)
27. அன்னம் ஆத்தா உருமாறி வெளிச்சென்றதைக் காட்சிப்படுத்துக. (Nov 2012)
28. செலவழுங்குதல் துறையை விளக்குக. (Nov 2011)
29. நும் பாடப்பகுதியில் உள்ள வஞ்சித்திணைப் பாடற்கருத்துக்களை எழுதுக. (Nov 2011)
30. ’மாமலர் முண்டக….’ என்ற நெய்தற்கலிப் பாடல்களைத் தொகுத்துரைக்க. (Nov 2011)
31.  பதிற்றுப்பத்தின் சிறப்புகளைக் கூறுக.
32. பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள ஆற்றுப்படை நூல்கள் குறித்து எழுதுக. (Nov 2010)

                       (10 மதிப்பெண் வினாக்கள்)
      பகுதி- :                                                      (3*10=30)
(10 மதிப்பெண் வினாக்கள் 5 கொடுக்கப்பட்டு 3 க்கு விடையளிக்க வேண்டும்)
1.   நட்பின் மேன்மையைக் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் வழிநின்று நிறுவுக. (april 2012)
2.   இயன்மொழித் துறையிலமைந்த புறநானூற்றுப் பாடல்களின் சிறப்பினைத் தொகுத்துரைக்க.
3.   வாழ்வியல் உண்மைகளை நெய்தற்கலி வழிநின்று புலப்படுத்துக. (april 2012)
4.   பாலைக்கலியில் கண்டோர் கூறும் உலக நியதியைத் தொகுத்துரைக்க. (Nov 2011)
5.   குறுந்தொகைத் தலைவியின் நிலையை விளக்குக.
6.   ’முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்’ – இக்கூற்றைப் பட்டினப்பாலை வழி நின்று நிறுவுக.
7.   பட்டினப்பாலை குறிப்பிடும் பரதவர்களின் வாழ்வியலை விளக்குக.
8.   கரிகாலனின் சிறப்புகளைப் பட்டினப்பாலை எவ்வாறு கூறுகின்றது? (Nov 2010)
9.   ’எறித்தரு கதிர்’ – எனத்தொடங்கும் கலித்தொகைப் பாடல் உணர்த்தும் வாழ்வியல் நெறிகளைப் புலப்படுத்துக.
10. பாண்டியன்பரிசில் இடம்பெறும் அன்னத்தின் பாத்திரப்படைப்பை – மதிப்பிடுக. (april 2012)
11. எட்டுத்தொகை நூல்களுள் அகப்பொருள் நூற்கருத்துக்களைத் தொகுத்தெழுதுக. (april 2012)
12. பாண்டியன் பரிசில் வேலனின் பாத்திரப்படைப்பைச் சித்தரிக்க. (Nov 2012)
13. அன்னத்தின் பண்பு நலன்களை விவரிக்க. (Nov 2010)
14. பாரதிதாசனின் பாத்திரப் படைப்பினை விளக்குக. (Nov 2011)
15. சங்க இலக்கியம் வாழ்வியல் இலக்கியம் என்னும் கருத்தை ஆய்க. (Nov 2012)
16. சங்க இலக்கியப் பாடல் திறனை நுமது பாடப்பகுதி கொண்டு வெளிப்படுத்துக. (Nov 2011)
17. எட்டுத்தொகை நூல்கள் குறித்துக் கட்டுரைக்க.
(இவற்றுடன் அலுவலக மொழிபெயர்ப்பு கேள்வி ஒன்றும் 10 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் –அவற்றை படவடிவில் கீழே இணைத்துள்ளேன்  பயன்படுத்தவும்)



*************

No comments:

Post a Comment