Monday, March 25, 2013

வினா வங்கி - முதலாமாண்டு இரண்டாம் பருவம்

வினா வங்கி -முதலாமாண்டு - இரண்டாம் பருவம் - தமிழ் CLA2G


முதலாமாண்டு இரண்டாம் பருவம் பயிலும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம், தேர்வு நெருங்கி விட்டது, நீங்கள் அதிக மதிப்பெண்களை பெறும் பொருட்டு முனைப்புடன் படித்து வருவீர்கள் என்பது தெரியும். அதற்கு பெரிதும் துணைநிற்பது முந்தைய தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேள்விகள் எப்படி கேட்கப்பட்டுள்ளன என்பதை ஆய்ந்து படிக்கும் முறையாகும். இங்கு உங்கள் வசதிக்காக முந்தைய பல்கலைக்கழகத் தேர்வுகளில் கேட்கப்பட்டக் கேள்விகளை தொகுத்தளித்துள்ளேன். அவற்றிற்கான விடைகளைத் தயார் செய்து மீண்டும் மீண்டும் படித்து தேர்வில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
   மு.தியாகராஜ்
தமிழ்த்துறைத்தலைவர்
குருநானக் கல்லூரி (சுழற்சி-2)


குருநானக் கல்லூரி (சுழற்சி - 2)
தமிழ்த் துறை
தமிழ் வினா வங்கி - இரண்டாமாண்டு
இரண்டாம் பருவம்  - CLA2G
நேரம்: 3 மணிநேரம்                                        மதிப்பெண்கள்: 75
பகுதி- :                                                        (10*2=20)
(2 மதிப்பெண் கேள்விகள்)
(2 மதிப்பெண் வினாக்கள் 12 கொடுக்கப்பட்டு 10 க்கு விடையளிக்க வேண்டும்)
    1.   நமச்சிவாய மந்திரம் அருங்கலமாக விளங்கும் பான்மையைச் சுட்டுக. (april 2010)
    2.   மனிதனுக்கு நற்றுணையாக விளங்குவது எதுவென திருநாவுக்கரசர் கூறுகிறார்? (Nov 2011)
    3.   சிவபெருமான் எத்தகையவன்?
    4.   நமச்சிவாயப் பதிகம் பாடப்பட்ட பின்னணி யாது?  april 2011
    5.   இருள் கெடுக்கும் விளக்காவது யாது? (april 2011)
    6.   உலகில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது எது?
    7.   திருநாவுக்கரசர் நமசிவாய பதிகத்தை பாடிய பின்னணியை விளக்குக.
    8.   பாவத்தை அறுப்பது எது என்று திருநாவுக்கரசர் கூறுகிறார்.
    9.   மாதோர் பாகத்தான் – யார்? (april 2011)
    10. தொல்லையின்பத்து இறுதி கண்டவள் யார்? விளக்குக. (april 2010)
    11.  ”இராமனுக்கு துணையாகச் செல்வேன்” என்று குலசேகர ஆழ்வார் கூறக்காரணம் யாது? (Nov 2011)
    12.  கண்ணனின் பிள்ளை விளையாட்டுகள் இரண்டினைத் தருக.
    13.  கண்ணன் துயிலும் அழகைக் கூறுக.
    14. குன்றைக் குடையாகக் கொண்டவன் யார்?
    15.  கண்ணன் செய்த இரு புராண நிகழ்வுகளைக் குறிப்பிடுக.
    16.  நளன் இழந்த உருவை எவ்வாறு பெற்றான்?
    17. தமயந்தி புரோகிதனுக்கு இட்ட பணி யாது? (april 2010)
    18.  குலசேகரர் பற்றி நீவிர் அறிவன யாவை? (april 2011)
    19.  ”என்னை இருங்கானில் நீத்த இகல் வேந்தன்” – இடம் சுட்டி பொருளுரைக்க. (april 2011)
    20. நளன் எந்த நகரில் யாருடன் இருந்தான்?
    21.  நளனைக் கண்டுவந்த புரோகிதன் தமயந்தியிடம் கூறிய மறுமொழியினை எடுத்துரைக்க.(Nov 2011)
    22. நளன் தேரோட்டிய சிறப்பினைப் புலப்படுத்துக.
    23. நளனை அவனுடைய பிள்ளைகள் எங்கே கண்டனர்.
    24. நபிகளிடம் மான் கூறிய தன் வரலாறு யாது? (april 2010)
    25. சீறாப்புராணம் – குறிப்பு வரைக.(Nov 2011)
    26. சீறா – என்னும் சொல்லின் பொருளைத் தருக.
    27. இசுலாம் மதத்தின் மூலமந்திரம் யாது?
    28. மானை நோக்கிச் சென்ற நபிகள் நாயகம் எவற்றையெல்லாம் பார்க்கவில்லை?
    29. சீடர்களிடம் இயேசு பெருமான் கூறியது யாது? (april 2010)
    30. பாவலன் பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன் பால் நின்ற கலி – இடம் சுட்டி பொருள் விளக்கம் தருக.
    31.  இடஞ்சுட்டி விளக்குக.
கோவில் பூனை புலியைப் பிடித்திடக்
கூட்டத்தோடு வந்து விழுந்தது.
    32. இடஞ்சுட்டி விளக்குக.
”உங்கள் அரசு ஒருவன் ஆள நீர் ஓடிப்போந்து
இங்கண் உறைதல் இழுக்கன்றோ”
    33. இடஞ்சுட்டி விளக்குக. (april 2010)
முன்னை வினையால் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண விழைந்ததோ..
    34. இடஞ்சுட்டி விளக்குக. (nov 2011)
’ உங்கள் கண்ணில் உறக்கமும் உள்ளதோ
  உள்ளம் கூட உறங்குவது என்னவோ’ 
    35. இடஞ்சுட்டி பொருள் விளக்கம் தருக.
”ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன்
காணுமாறு இனி உண்டெனில் அருளே’
    36. இலக்கணக் குறிப்பு எழுதுக. (april 2010)
மூவாமயல், நோக்கின், உறுமதி, அடைந்தது
    37. இலக்கணக் குறிப்பு எழுதுக. (nov 2011)
தடங்கண்ணி, வெண்குடை, மதியே, தர்மதேவன்
    38. இலக்கணக் குறிப்பு எழுதுக – மாப்பிணை, சுவை அறுமொழி
    39. இலக்கணக் குறிப்பு வரைக.- அருவினை, அறுமொழி.
    40. இலக்கணக்குறிப்பு வரைக.- மலர்க்கண், முறை முறை
    41. இலக்கணக் குறிப்பு எழுதுக.
என்றன் குலப்பெருஞ்சுடரே,  கண்டாய்,  நோக்கார், ஒழிக.
    42. . நளவெண்பா – குறிப்பு வரைக. . (april 2010)
    43. பிணை நானே என்ற நபிக்கு வேடன் கூறிய மறுமொழி யாது? (april 2010)
    44. சீறாப்புராணத்தில் இடம்பெறும் வேடனின் தோற்றம் எவ்வாறிருந்தது?(nov 2011)
    45. வேடனிடம் நபிகள் கூறியது யாது?
    46. இயேசுவின் வஞ்சக நண்பன் யார்?
    47. ஏசுநாதர் செபம் செய்யும் போது தோழர்கல் என்ன செய்துகொண்டிருந்தனர்?(nov 2011)
    48. யூதாஸ் இயேசுவை எவ்வாறு காட்டிக் கொடுத்தான்?
    49. ஏசு காவியம் – குறிப்பு வரைக.
    50. ”பாடு” என்னும் சொல்லின் பொருளினை விளக்குக.
    51.  இயேசு காவியம் ஆசிரியர் பற்றிக் கூறுக.
    52. தேவாரம் – குறிப்பு வரைக. (nov 2011)
    53. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் குறிப்பு வரைக.
    54. உமறுப்புலவர் – குறிப்பு வரைக.
    55.  இந்தியாவில் வழங்கும் நால்வகை முக்கிய மொழிக்குடும்பங்களைக் குறிப்பிடுக.
    56. ’அரிசி’ என்னும் தமிழ்ச்சொல் கிரேக்க, இலத்தீன் மொழிகளில் எவ்வாறு வழங்கப்படுகின்றது?
    57. தமிழ் எந்த மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது?
    58.  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அண்மையில் எங்கு எப்போது நடந்தது?
    59. உலகப்பொதுமறை எனப்படும் அற நூல் எது?
    60. மொழி விளக்கம் தருக.
    61.  செம்மொழியின் வரையறை யாது?
    62. செம்மொழி இலக்கண நூல்களைக் கூறுக.


(5 மதிப்பெண் கேள்விகள்)
  பகுதி- :                                                   (5*5=25)
  (5 மதிப்பெண் வினாக்கள் 7 கொடுக்கப்பட்டு 5 க்கு விடையளிக்க வேண்டும்)
1.   நாவுக்கரசர் இறைவனின் பெருமைகளை எவ்வாறு புகழ்ந்துள்ளார். . (april 2010)
2.       ’நன்னெறியாவது நமச்சிவாயமே’ என்று இறைவனைப் புகழ்ந்து பாடும் திருநாவுக்கரசரின் பாடல்கள் பற்றி விளக்குக. (Nov 2011)
3.       நற்றுணையாவது நமசிவாயவே – விளக்குக.
4.       நமச்சிவாயத் திருப்பதிகம் உரைக்கும் செய்திகளைத் தருக.
5.       நமச்சிவாயப் பதிகம் எவற்றை அணிகலன்களாகக் கூறுகின்றது.
6.       தேவாரப் பாடல்கள் குறித்து எழுதுக.
7.   நளனுக்கும் அவனது குழந்தைகளுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலை எழுதுக. (april 2010)
8.   மானின் சிறப்பியல்பை உமறுப்புலவர் எங்கனம் சுட்டியுள்ளார்? . (april 2010)
9.       மானுக்கு யான் பிணை என்று கூறிய நபிகள் நாயகத்திடம் வேடன் கூறியது யாது? (Nov 2011)
10. தேவகியின் வருத்தத்தை குலசேகரர் வழி நின்று விளக்குக. . (april 2010)
11.   கண்ணனின் இளைமைப் பருவத் திருவிளையாடல்களாக குலசேகராழ்வார் கூறுவன யாவை? (Nov 2011)
12.   கண்ணன் அழகினை குலசேகராழ்வார் கூறும் விதத்தினை எடுத்துரைக்க.
13.   யசோதை பெற்ற இன்பங்களாகத் தேவகி கூறுவன யாவை?
14.   குலசேகராழ்வார் பற்றிச் சிறுகுறிப்பு வரைக.
15.   நந்தன் பெற்றனன் நல்வினை என்று ஆழ்வார் கூறுவன யாவை?
16. தமயந்தி நளனைத் தேட எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் குறிப்பிடுக.
17. தமயந்தி அடைந்த துன்பத்தினைப் புலப்படுத்துக.
18.   நளவெண்பா – நூல் குறித்து எழுதுக. (Nov 2011)
19.   நளனைத் தேடிப் புரோகிதன் அனுப்பப்பட்டதைக் கூறுக. (april 2011)
20.   தமயந்தியின் இரண்டாம் சுயம்வரத்தின் நோக்கத்தைப் புலப்படுத்துக.
21.   இயேசு காவியத்தில் வஞ்சக நண்பன் செய்த செயல்களைக் கூறுக. (Nov 2011)
22.   இயேசு தன் சீடர்களிடம் கூறியதை விவரிக்க.
23.   இயேசு பிரான் செபம் செய்த திறத்தினை எடுத்துரைக்க.
24.   தியாகத்தின் வரலாற்றைக் கூறும் நூல் இயேசுகாவியம் என்னும் கருத்தை விளக்குக.
25.   உள்ளிருந்து உதிரம் வடிக்கின்றேன் என்று இயேசு கூறியன யாவை?
26.    பன்னிரு சைவத்திருமுறைகளைப் பட்டியலிடுக. (april 2011)
27. கவிஞர் கண்னதாசனின் கவிதைச் சிறப்பைச் சுட்டுக. . (april 2010)
28. பல்லவர் கால இலக்கியங்கள் பற்றி சிறு குறிப்பு வரைக. . (april 2010)
29. மான் முகம்மது நபியிடம் உரைத்ததைக் குறிப்பிடுக.
30. சீறாப்புராணத்தில் அரபி வேடனின் காட்சியை உமறுப்புலவர் எவ்வாறு கூறுகிறார்?
31. வீடு பெற்று உயர்ந்து வாழ்ந்தேன் என வேடன் கூறியன எவை? (april 2011)
32. தமிழின் தொன்மையை விளக்குக.
33. தமிழ் உயர்தனிச்செம்மொழி ஆகுமாற்றை நிறுவுக.
34. இந்திய செம்மொழிகளை விளக்குக.
35. தமிழின் சிறப்புகளைக் கூறுக.


(10 மதிப்பெண் வினாக்கள்)
      பகுதி- :                                           (3வு10=30)
(10 மதிப்பெண் வினாக்கள் 5 கொடுக்கப்பட்டு 3 க்கு விடையளிக்க வேண்டும்)
1.   நபிகள் நாயகம் மானுக்கு பிணை நின்ற வரலாற்றை விளக்குக. . (april 2010)
2.       நபிகள் நாயகத்திடம் மான் கூறியனவற்றைத் தொகுத்துரைக்க(Nov 2011)
3.       தேவகியின் ஆற்றாமை உணர்வை விளக்குக. (april 2010)
4.       கண்ணனை நினைந்து தேவகி கூறும் கருத்துக்களை விவரிக்க. (Nov 2011)
5.       நளன் தமயந்தி மீண்டும் ஒன்று சேர்ந்த வரலாற்றை விளக்குக.
6.       நளன் தன் மக்களோடு உரையாடிய உரையாடல்களைத் தொகுத்துரைக்க.
7.       தமயந்தி அறிவுத் திறமுடையவளாகப் படைக்கப்பட்டுள்ள பாங்கினை விளக்கி எழுதுக.
8.       வஞ்சக நண்பன் குறித்து இயேசுகாவியம் கூறுவன யாவை?
9.       கண்ணதாசன் ’பாடுகளின் பாதை’ என்னும் பகுதியில் கூறியுள்ள செய்திகளைத் தொகுத்துரைக்க.
10.   தமிழில் பக்தி இலக்கியங்கள் குறித்து கட்டுரை ஒன்று எழுதுக. (Nov 2011)
11.   பக்தி இலக்கியங்கள் வலியுறுத்தும் மாண்புகளை எடுத்துரைக்க. (april 2011)
12.   செம்மொழித் தகுதிகளை விவரிக்க.
13.   ஆழ்வார்களின் பக்திச் சிறப்பு குறித்து கட்டுரைக்க
14.   தமிழின் வளர்ச்சிக்காக செய்ய வேண்டிய பணிகள் யாவை?
15.   தொன்மொழியான தமிழ், காலத்தேவைகளுக்கேற்ப வளர்ந்து வாழும் மொழியாகத் திகழுமாற்றைப் பாராட்டுக. (april 2011)
16.   செம்மொழித் தகுதிகளை விவரிக்க.
17.   தமிழின் தொன்மையைப் புலப்படுத்துக.
18.   தமிழ்ச் செம்மொழி அறிந்தேர்ப்புக்காக நடைபெற்ற அறப்போராட்டங்களை விளக்குக.
19.   சமயங்கள் ஆற்றியுள்ள தமிழ்ப் பணியை விரித்துரைக்க.
20.   சைவமடங்கள் தமிழுக்காற்றிய தொண்டுகள் குறித்து எழுதுக.

(இவற்றுடன் 10 மதிப்பெண்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பு வினாவும் கேட்கப்படும் அவற்றை படவடிவில் கீழே இணைத்துள்ளேன். பயன்படுத்தவும்)




No comments:

Post a Comment