Tuesday, December 25, 2012

தமிழ்ச் செம்மொழி வரலாறு


வணக்கம் மாணவச் செல்வங்களே!

முதலாமாண்டு இரண்டாம் பருவத்தில் தற்பொழுது உரைநடைக்கான பாடத்திட்டமாக தமிழ்ச் செம்மொழி வரலாறு உள்ளது. இப்பாடத்திட்டத்திற்கு உரிய சரியான நூல்கள் இல்லாத நிலையில் தற்பொழுது அதுகுறித்த கட்டுரைகள் இணையத்தின் வெவ்வேறு தளங்களில் கிடைப்பவறைத் தொகுத்து தர முற்பட்டுள்ளேன்.  அதற்கு முன்பாக தமிழ்ச்செம்மொழி வரலாறு குறித்து தங்களுக்கு உரிய பாடத்திட்டத்திட்டம் என்ன என்பதையும், அதுகுறித்து செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பெறும் செய்திமடல்களின் இணைப்பையும் இப்பதிவில் முதலில் வெளியிடுகின்றேன். தொடர்ந்து தலைப்பு சார்ந்த கட்டுரைகளும் இடம்பெறும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அன்புடன்
மு.தியாகராஜ்


உரைநடைக்கான பாடப்பகுதி:
(ஒவ்வொரு தலைப்பையும் சொடுக்கி அவற்றுக்குரிய கருத்துக்களை வாசிக்கவும்)


பரிதிமாற்கலைஞ்ர் அவர்கள் முதல் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் வரை (அறிஞர்கள்- அமைப்புகள்- நிறுவனங்கள்- இயக்கங்கள் தொடர் முயற்சிகள் அறப்போராட்டங்கள் - உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை)

பார்வை நூல்கள்
ஆய்வரங்க சிறப்புமலர் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை 2010
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு சிறப்பு மலர் கோவை 2010
சாலினி இளந்திரையன், தமிழ்ச் செம்மொழி ஆவணம், மணிவாசகர் பதிப்பகம்
சென்னை 2005
கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கழக வெளியீடு 

செம்மொழி செய்திமடல்களை வாசிக்க கீழே சொடுக்கவும்:


Saturday, December 15, 2012

கலித்தொகை



கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார். துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன,

பாடல் தொகைகள்
கலித்தொகைப் பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், குறிஞ்சிக்கலியில் 23 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், மருதக்கலியில் 35 பாடல்களும், நெய்தற்கலியில் 33 பாடல்களும், பாலைக்கலியில் 35 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.

கலித்தொகை காட்டும் சமூகம்
களிற்றையும் அடக்கும் ஆற்றல் இசைக்கு உண்டு என்ற உண்மையும், நீராடல் பற்றிய செய்தியும், மக்களின் நல்வாழ்விற்கான நெறிகளும் இவற்றில் விளக்கப்பட்டுள்ளன. மடலேறுதல், பொருந்தாக் காதல், ஒருதலைக் காமம் ஆகியன பற்றி செய்திகள் அதிகம் உள்ளன. மக்கள் காமனை வழிபாடு செய்தமை பற்றி அறிய முடிகிறது.

வரலாற்று, புராணச் செய்திகள்
கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம் கூறப்பட்டுள்ளன. பாரதக் கதை நிகழ்ச்சியான அரக்கு மாளிகை தீப்பிடித்தல், பீமன் காப்பாற்றல், திரௌபதியின் கூந்தலை துச்சாதனன் பற்றியிழுத்தல், பீமன் வஞ்சினம், துரியன் தொடையை பீமன் முறித்தது ஆகிய புராணச் செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர்கள் பற்றியும் பிற தொகை நூல்களில் இடம்பெறாத 'காமன் வழிபாடு' பற்றியும் கலித்தொகை கூறுகிறது.முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது.


பாலைக்கலி(9)
பாடலை இயற்றியவர்- நல்லந்துவனார்
செவிலியின் வினவலும் அந்தணரின் வழிப்படுத்தும் பேச்சும்
கற்பறம் பூண்டார்
எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நீழல்,
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைச் கொளைநடை அந்தணீர்! –
வெவ்இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ்இடை,               5
என்மகள் ஒருத்தியும், பிறள்மகன் ஒருவனும்,
தம்முளே புணர்ந்த தாம் அறிபுணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணீரோ? - பெரும!’
காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய                  10
மாண் இழை மடவரல் தாயிர் நீர்போறிர்
பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,                   15
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என் செய்யும்?
தேருங்கால், நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே.
ஏழ்புணர் இன்இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்கு அவைதாம் என் செய்யும்?
சூழுங்கால், நும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே                  20
என ஆங்கு –
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலைப்பிரியா ஆறும் மற்று அதுவே.’

துறை: உடன் போய தலைவியின் செவிலி இடைச்சுரத்து முக்கோற் பகவரைக் கண்டு இவ்வகைப்பட்டாரை ஆண்டுக் காணீரோவென் வினவியாட்கு. ”அவரைக் கண்டு அஃதறமெனவே கருதிப் போந்தோம்; நீரும் அவர் திறத்து எவ்வம் பட வேண்டா” என எடுத்துக்காட்டி அவர் தெருட்டியது.
துறைவிளக்கம்: களவொழுக்கத்தில் தலைவிக்கும் தலைவனுக்கும் இடையூறு உண்டாகியது. அதனால் தலைவன் தலைவியை அழைத்துக் கொண்டு போயினன். அதனை அறிந்த செவிலித்தாய் தலைவியைத் தேடிச் செல்லும் போது முக்கோல் பகவரைக் கண்டு வினவ, அவர் ”நீங்கள் சொல்லிய இருவரையும் கண்டோம், அவர்கள் செயல் அறநெறிப்பட்டது. நீங்கள் துன்பப்டவேண்டாம்” என்று கூறுவது.
கருத்துரை
எறித்தலை தருகின்ற ஞாயிற்றின் வெம்மையைத் தாங்குவதற்காக ஏந்திய குடையின் நிழலில் உறியிலே வைத்த கமண்டலமும், புகழுக்குச் சான்றாக விளங்கும் முக்கோலையும் முறையாக தோளிலே வைத்துக் கொண்டு வேறு ஒன்றும் அறியாத நெஞ்சினராய், நீர் குறித்தவாறு ஏவல் செய்யும் ஐம்பொறிகளையும், உமக்கென்று கொள்கையினையும் ஒழுக்கத்தினையும் உடைய அந்தணீர்! நீவீர் வெம்மையான காட்டிடத்தே செல்லுகின்றவர் என்பதால் உம்மைக் கேட்கின்றேன். இக்காட்டுவழியிலே என் மகள் ஒருத்தியும் வேறொருத்தி மகன் ஒருவனும் தமக்குள்ளே பிறரறியாதவாறு கூடினர். இப்பொழுது அவர்கள் கூடியதைப் பிறரும் அறிந்துவிட்டனர். அவர்கள் இருவரையும் நீவீர் கண்டீரோ?பெரும! என்றவுடன் அவரும்,

“காணாமல் இருந்தேன் அல்லேன். கண்டேன். காட்டிடையே ஆண்மகனுக்குரிய அழகினையுடைய தலைவனோடு அரிய சுரத்தைக் கடந்து போகக் கருதிய மாட்சிமைப்பட்ட அணிகலன்களை அணிந்த மடப்பத்தையுடைய பெண்ணின் தாயா் போல்வீர்!

நறுமணப்பொருட்கள் விரவிய சந்தனம், உடம்பில் பூசிக் கொள்பவருக்குப் பயன் கொடுக்கிறதே தவிர, மலையிடத்து பிறந்திருந்தாலும் அச்சந்தனம் மலைக்கு என்ன செய்யும்? நினைத்துப் பார்த்தால் உம் மகளும் நுமக்கு அதைப் போன்றவளே!

சிறப்பான வெண்முத்தம் அணிவார்க்குப் பயன்படுகிறதே ஒழிய, கடல்நீரிலே பிறந்ததாயினும் நீருக்கு அவை என்ன செய்கின்றன? ஆராயுங்கால், நும் மகளும் உமக்கு அத்தன்மையானவளே!

ஏழுநரம்புகளால் கூட்டப்பட்ட இனிய இசை பாடுவோருக்கே பயனினைத் தருகின்றது. அது யாழுலே பிறந்திருந்தாலும் யாழுக்கு அது எதைச் செய்கின்றது? சிந்தித்துப் பார்க்கின் நும் மகளும் உமக்கு அதைப் போன்றவளே! என்பதால்,
மிக உயர்ந்த கற்பினையுடைய அப்பெண்ணுக்குத் துன்பத்தைத் தராதீர்! அவளோ, சிறந்தவன் பின்னே சென்றனள். அறத்திலிருந்து மாறுபடாது செல்லும் சிறந்த வழியும் அதுவேயாகும்.” என்றார்.

இப்பாடல் விளக்கத்தின் இணைப்பு:
http://kalithogai.blogspot.in/


நெய்தற்கலி(133).
16-தலைவியை மணக்கும்படி தலைவனுக்கு தோழி அறிவுரை கூறல்!
மாமலர் முண்டகந் தில்லையோ டொருங்குடன்
கான லணிந்த வுயர்மண லெக்கர்மேற்
சீர்மிகு சிறப்பினோன் மரமுதற் கைசேர்த்த
நீர்மலி கரகம்போற் பழந்தூங்கு முடத்தாழைப்
பூமலர்ந் தவைபோலப் புள்ளல்குந் துறைவகேள்;
ஆற்றுதலென்பதொன் றலந்தவர்க் குதவுதல்                 6     
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப்படுவது பாடறிந் தொழுகுத
லன்பெனப் படுவது தன்கிளைசெறாஅமை
அறிவெனப்படுவது பேதையார் சொன்னோன்றல்            10     
செறிவெனப்படுவது கூறியது மறாஅமை
நிறையெனப் படுவது மறைபிறரறியாமை
முறையெனப் படுவது கண்ணோடா துயிர்வௌவல்
பொறையெனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்;
ஆங்கதையறிந்தனி ராயினென் றோழி                     15
நன்னுத னலனுண்டு துறத்தல் கொண்க
தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைத
னின்றலை வருந்தியா டுயரஞ்
சென்றனை களைமோ பூண்கநின் றேரே

துறை: ‘‘வரைவுவுடம் பட்டோர்க் கடாவல் வேண்டினும்என்பதனால் தலைவன் தெருளாதவனைத் தெருட்டி வரைவுகடாயது.
துறை விளக்கம்: தலைவன் களவொழுக்கத்தை உடையவனாய்த் தலைவியை மணந்து கொள்ளாமல் ஒழுகிவந்தான் அதனால் தோழி உலகியலை எடுத்துச் சொல்லி மணந்து கொள்ளும்படி கூறித் தலைவனைத் தெருட்டியது.

கருத்துரை: 
    கருமையையுடைத்தாகிய மலரையுடைய கழிமுள்ளி தில்லையோடே சேரச் சூழ்ந்த கானலிடத்துத் திரையிட்டமணல் மேலே காற்றாலுயர்ந்த மணலிலே உடனின்ற, புகழ் மிகுகின்ற தலைமையினையுடைய தக்கணா மூர்த்திதேவர் தாமிருந்த ஆலமரத்தே தாமிருப்பதற்கு முன்னே தூக்கிவைத்த நீர்நிறைந்த குண்டிகை போலப் பழந்தூங்கும் முடத்தையுடைய தாழைப்பூ அலர்ந்தவைபோலக் குருகினம் அத்தாழைமேலே தங்குந் துறைவனே! யான் கூறுகின்றதனைக்கேள்,

     இல்வாழ்க்கைநடத்துதல் என்று சொல்லுவது மிடித்தவர்க்கு யாதானும் ஒன்றை உதவுதலை; ஒன்றைப் பாதுகாத்தல் என்று சொல்லுவது கூடினாரைப் பிரியாதிருத்தலை; மக்கட்பண்பு என்று சொல்லப்படுவது உலகவொழுக்கம் அறிந்தொழுகுதலை; அன்பு என்று சொல்லப்படுவது தன்சுற்றத்தைக் கெடாதிருத்தலை; அறிவு என்று சொல்லப்படுவது அறியாதார் தன்னைப் பார்த்துச்சொல்லுஞ் சொல்லைப் பொறுத்தலை; ஒருவரோடு ஒருவர்க்கு உறவுஎன்று கூறப்படுவது கூறியதொன்றைத் தாம் மறாதிருத்தலை; நிறை என்று சொல்லப்படுவது மறைந்தது ஒரு காரியம் பிறர் அறியாமல் ஒழுகுதலை; முறை என்று சொல்லப்படுவது நமரென்று கண்ணோட்டஞ்செய்யாது அவர் செய்த குறைக்கேற்ப அவர் உயிரைக்கொள்ளுதலை; பொறை என்று சொல்லப்படுவது பகைவரைக் காலம் வருமளவும் பொறுத்திருத்தலை அப்படியே அக்குணத்தை நீரே அறிந்தொழுகினீராயின் அவ்வொழுக்கத்திற்கு ஏற்பது ஒன்று கூறுவேன்; கொண்க! என்றோழியது நன்னுதலின் நலத்தை நுகர்ந்து அவளைத் துறத்தல், இனியதாகிய பாலை யுண்ணுமவர்கள் பாலையுண்டு அதனைக்கொண்டிருக்குங் கலத்தைக் கவிழ்த்துவிடுதல் போல்வதொன்று; ஆகையினாலே, நின்னிடத்து வருந்தினவள் துயரத்தை வரைந்து சென்றனையாய்க் களைவாய்; அங்ஙனங் களைதற்கு நின் தேர் புரவியைப் பூண்பதாகவெனத் தெருட்டி வரைவுகடாயினாள்.
இப்பாடல் விளக்கத்தின் இணைப்பு:
விக்கிபீடியா இணைப்பு:
http://ta.wikipedia.org/s/o3e
பிடிஎஃப் வடிவில் விரிவுரையுடன் படிக்க மற்றும் பதிவிறக்க:

Friday, December 14, 2012

குறுந்தொகை


குறுந்தொகை

    குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுவது. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் இது குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. . ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்ககூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புக்களை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.

பாடியோர்

     இத் தொகுப்பில் அமைந்துள்ள 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர்.இந்நூலில் அமைந்துள்ள பல் பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அத்தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். 'அனிலாடு முன்றிலார்', 'செம்புலப்பெயல் நீரார்', 'குப்பைக் கோழியார்', 'காக்கைப்பாடினியார்' என்பன இவ்வாறு உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.


நூலமைப்பு
       நான்கு முதல் எட்டு வரையான அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு இது. (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுவது குறுந்தொகை. இந்நூலில் முதல்,கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னனியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளை சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும்.























2. குறிஞ்சி – தலைவன் கூற்று
(இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.)
1
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?

துறை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்தி, தனது அன்பு தோன்ற நலம் பாராட்டியது
ஆசிரியர்: இறையனார்

விளக்கம்: பூந்தாதை ஆராய்ந்து உண்ணுகின்ற வாழ்க்கையினையும் உள்ளிடத்தே சிறையையும் உடைய வண்டே, என் நிலத்து வண்டாதலின் யான் விரும்பியதையே கூறாமல், நீ கண்கூடாக அறிந்ததையே சொல்வாயாக: நீ அறியும் மலர்களுள், எழுமையும் என்னோடு பயிலுதல் பொருந்திய நட்பையும், மயில் போன்ற மென்மையையும், நெருங்கிய பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போல நறுமண முடைய பூக்களும், உள்ளனவோ?

3. குறிஞ்சி - தலைவி கூற்று
(வரையாது ஒழுகும் தலைவன் வேலிப் புறத்தே நின்றதை அறிந்த தோழி அவன் வரைந்து கொள்ள வேண்டுமென்னும் எண்ணம் உடையவளாகி அவன் செவியில் படும்படி அவனது நட்பைப் பழித்துக் கூறிய போது, தலைவி அந்நட்பு மிகச் சிறப்புடையது என்று உணர்த்தியது.)
2
நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.

துறை: என்பது தலைமகள் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டித்தோழி இயற்பழித்தவழித் தலைமகள் இயற்பட மொழிந்தது.
ஆசிரியர்: இறையனார்

விளக்கம்: மலைப் பக்கத்தில் உள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய நாட்டைஉடைய தலைவனோடு யான் செய்த நட்பானது, பூமியைக் காட்டிலும் அகலம் உடையது; ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது; கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது.

16. பாலை – தோழி கூற்று
 (பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ’என்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்டு நின்னை நினைந்து மீண்டு வருவர்’’என்று கூறி ஆற்றுவித்தது.)
3
உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர் நுதி புரட்டு மோசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தோரே.                5

துறை: பொருள்வயிற் பிரிந்த இடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி கூறியது.
ஆசிரியர் : பாலை பாடிய பெருங்கடுங்கோ.

விளக்கம்: தோழி ஆறலை கள்வர் செப்பஞ் செய்யும் பொருட்டு இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை நக நுனியிலே புரட்டுதலால் உண்டாகிய ஒலியைப் போல, செம்மையாகிய காலை உடைய ஆண் பல்லியானது, தன் துணையாகிய பெண் பல்லியை அழைத்தற்கு இடமாகிய, கள்ளிகளை உடைய பாலையைக் கடந்து பொருள் வயிற் சென்ற, அழகிய அடியை உடைய தலைவர் நம்மை நினையாரோ?

20. பாலை - தலைவி கூற்று
(தலைவனது பிரிவை உணர்த்திய தோழியை நோக்கி, என்பாலுள்ள அருளையும் அன்பையும் நீக்கிப் பிரிவது அறிவுடையோருக்கு ழகன்று” என்று தலைவி உணர்த்தியது.)
4
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!

துறை: செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. –
ஆசிரியர்: கோப்பெருஞ் சோழன்

விளக்கம்: தோழியே, அருளையும் அன்பையும் துறந்து தம் துணைவியை விட்டு பொருள் தேடும் முயற்சியின் பொருட்டு பிரியும் செயலை உடைய தலைவர் அறிவுடையவராயின், அந்த ஆற்றலை உடையோர் அறிவுடை யவரே ஆகுக! அவரைப் பிரிந்திருத்தற்குரிய ஆற்றல் இல்லாத நாம் அறிவிலேம் ஆகுக!

31. மருதம் - தலைவி கூற்று
(அயலார் தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் துணங்கையாடும் இயல்புடையேன்; என்னோடு நட்பு செய்து பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் அத்துணங்கைக்குத் தலைக்கை தந்தான். அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).
5
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த               5
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.

துறை: நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது.
ஆசிரியர்: ஆதிமந்தி

விளக்கம்: மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனை வீரர் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் தம்முள் தழுவி ஆடுகின்ற துணங்கைக் கூத்தின் கண்ணும் ஆகிய எவ்விடத்தும் கண்டேனில்லை; யானும் ஆடுகின்ற களத்திற்குரிய ஒரு மகளே; என் கையில் உள்ள, சங்கை அறுத்துச் செய்து விளங்குகின்ற வளையல்களை நெகிழச் செய்த, பெருமை பொருந்திய தலைவனும் ஆடுகின்ற களத்தில் உள்ள ஒருவனே.

40. குறிஞ்சி - தலைவன் கூற்று
(தெய்வத்தாலாகிய கூட்டத்தின்பின்பு தலைவி, தலைவன் பிரிவா னோவென ஐயுற்றவிடத்து அதனைக் குறிப்பாலறிந்த தலைவன் ‘ஒரு தொடர்பு மில்லாத நாம் ஊழின் வன்மையால் ஒன்றுபட்டோ மாதலின் இனி நம்மிடையே பிரிவு உண்டாகாது’ என்று உணர்த்தியது.)
6
யாயு ஞாயும் யாரா கியரோ
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.           5

துறை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின்னர், பிரிவரெனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியது
ஆசிரியர்: செம்புலப் பெயல்நீரார்

விளக்கம்: என்னுடைய தாயும், நின் தாயும் ஒருவருக்கொருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? என் தந்தையும், நின் தந்தையும், எந்த முறையில் உறவினர்? இப்பொழுது பிரிவின்றியிருக்கும் யானும் நீயும் ஒருவரையொருவர் எவ்வாறு முன்பு அறிந்தோம்? இம்மூன்றும் இல்லையாகவும், செம்மண் நிலத்தின்கண்ணே பெய்த மழைநீர் அம்மண்ணோடு கலந்து அதன் தன்மையை யடைதல் போல, அன்புடைய நம் நெஞ்சம் தாமாகவே ஒன்றுபட்டன.

 49. நெய்தல் - தலைவி கூற்று
(தலைமகன் பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்து முன்னிருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு அளவளாவி, “நாம் பிறவிதோறும் அன்புடைய கணவனும் மனைவியுமென இருப்போமாக!” என்று தலைவி கூறியது.)
7
அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே. 5

துறை: தலைமகன் பரத்தை மாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள், அவனைக் கண்டவழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழிப் பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது.
ஆசிரியர்: அம்மூவனார்

விளக்கம்: அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையுமுடைய கடற்கரையை உடைய தலைவ இப்பிறப்பு நீங்கப்பெற்று, நமக்கு வேறு பிறப்பு உண்டாயினும் என்னுடைய தலைவன் இப்பொழுது என்பால் அன்பு செய்தொழுகும் நீயே ஆகுக! நின்னுடைய மனத்திற்கு ஒத்த காதலி, இப்பொழுது நின் நெஞ்சு கலந்தொழுகும் யானே ஆகுக!


 69. குறிஞ்சி - தோழி கூற்று
(இரவுக்குறியை விரும்பிய தலைவனை நோக்கி, "நீ இரவில் வருவை யாயின் நினக்குத் தீங்குண்டாகுமோ வென்றேண்ணி யாம் வருந்துவோம்; ஆதலின் நீ வாரற்க" என்று தோழி மறுத்துக் கூறியது.)
8
கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றேனக்
கைம்மை யுய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சார னாட நடுநாள் 5
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

துறை: தோழி, இரவுக்குறி மறுத்தது.
ஆசிரியர்: கடுந்தோட் கரவீரனார்

விளக்கம்: கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்து பாட்டை அடைந்ததாக, கைம்மைத் துன்பத்தைப் போக்கமாட்டாத, விருப்பத்தையுடைய பெண்குரங்கானது மரமேறுதல் முதலிய தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியை, சுற்றத்தினிடத்து கையடையாக ஒப்பித்து ஓங்கிய மலைப் பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக் கொள்ளும், சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே, நள்ளிரவில், வாரற்க; அங்ஙனம் நீவரின் நினக்குத் தீங்குண்டாகு மென்றெண்ணி நாம் வருந்துவோம் நீ தீங்கின்றி வாழ்வாயாக!

124. பாலை - தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய தலைவன், “பாலை நிலம் இவளை வருத்தற்கு உரியதன்று: இன்னாமையையுடையது” என்று கூற, “தலைவரைப் பிரிந்தாருக்கு வீடுமட்டும் இனிமையையுடையதோ?” என்று வினவு முகத்தால் தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி அறிவித்தது.)
9
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

துறை: புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.
ஆசிரியர்: பாலைபாடிய பெருங்கடுங்கோ.

விளக்கம்: தலைவ உப்பு வாணிகர் பலர் கூடிக் கடந்து சென்ற பக்கத்தையும், விரிந்த இடத்தையும் பெற்ற குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய, ஓமை மரங்கள் வளர்ந்த பெரிய பாலை நிலங்கள், இன்னாமையையுடையன என்று கூறித்தனியே செல்லக் கருதினீராயின் தலைவரைப் பிரிந்த தனிமையையுடைய மகளிருக்கு வீடுகள் இனிமை தருவனவோ? அல்ல.

167.  முல்லை – செவிலித்தாய் கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி நற்றாயினிடத்தில், “தலைவி தலைவன் உவக்கும்படி அட்டு உண்பிக்கின்றாள்” என்று கூறியது.)
10
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின் 5
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.

துறை: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது.
ஆசிரியர்: கூடலூர் கிழார்.

விளக்கம்: தோழி முற்றிய தயிரைப் பிசைந்த காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை துடைத்துக் கொண்ட ஆடையை துவையாமல் உடுத்துக் கொண்டு குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில் தாளிப்பினது புகை மணப்ப தானே துழாவிச் சமைத்த இனிய புளிப்பையுடைய குழம்பை தன் தலைவன் இனிதென்று உண்பதனால் தலைவியின் முகமானது நுண்ணிதாக மகிழ்ந்தது.

முற்றும்

குறுந்தொகை விக்கிபீடியா இணைப்பு:
http://ta.wikipedia.org/s/hmv
இணையத்தமிழ் கல்விக் கழகம் பிடிஎஃப் இணைப்பு:

Tuesday, December 11, 2012

புறநானூறு(212-216)


புறநானூறு

புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை.பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன. புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.

பாடியவர்கள்

இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்களனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குயவன்மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர். புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.

நூல் அமைப்பு

இந்நூலில் பாடல்கள் தொகுக்கப்படும்போது ஒருவகை இயைபு கருதி, முதலில் முடிமன்னர் மூவர், அடுத்து குறுநில மன்னர்,வேளிர் ஆகியோரைப் பற்றிய பாடல்களும் அடுத்து போர்ப் பற்றிய பாடல்களும், கையறுநிலைப்பாடல், நடுகல், மகளிர் தீப்பாய்தல் என்று தொகுத்துள்ளனர். புறப்பொருள் கருத்துகளைத் தழுவி பாடப்ப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் திணை, துறை, பாடினோர், பாடப்பட்டோர், பாடப்பட்ட சூழல் போன்ற குறிப்புகள் உள்ளன.

புறநானூறு வழி அறியலாகும் செய்திகள்

அக்காலத் தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.

இப்புறநானூற்றில் நமக்கு பாடப்பகுதியாக அமைந்திருப்பது, உணர்ச்சியொத்த நட்பிற்கு எடுத்துகாட்டாய்த் திகழ்ந்த பிசிராந்தையார் பாடலும், கோப்பெருஞ்சோழனின் பாடல்களும் ஆகும்.


212
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா,
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ,
வைகு தொழில் மடியும் மடியா விழவின்                  5
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி,
கோழியோனே, கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே.                    10


திணை - அது; துறை - இயன்மொழி.

கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

(இ - ள்.) உம்முடைய இறைவன் யார்தானென்று கேட்பீராயின், எம்முடைய இறைவன் களமர்க்கு அரிக்கப்பட்ட முதிர்ந்த விரும்பத்தக்க மதுவை ஆமையிறைச்சியுடனே வேட்கைதீர அக்களமர் உண்டு ஆரன்மீனாகிய கொழுவிய சூட்டை அழகிய கதுப்பகத்தேயடக்கி மதுவுண்ட மயக்கத்தால் வைகுந்தொழிலொழியும் நீங்காத விழவினையுடைய புது வருவாயுளதாகிய நல்ல சோழநாட்டுள்ளும் பாணருடைய வருத்தமுற்ற சுற்றத்தினது பசிக்குப் பகையாய் உறையூரென்னும் படைவீட்டிடத்திருந்தான், கோப்பெருஞ்சோழன்; புரையில்லாத நட்பினையுடைய பொத்தியென்னும் புலவனொடு கூடி மெய்ம்மையார்ந்த மிக்கமகிழ்ச்சியை நாடோறும் மகிழ்ந்து-எ - று.

கோழி - உறையூர்.

நுங்கோ யாரென வினவின், எங்கோக் கோப்பெருஞ்சோழன், அவன் பசிப்பகையாகிப் பொத்தியொடு வைகலும் நக்குக் கோழியிடத்திருந்தான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.



213
மண்டு அமர் அட்ட மதனுடை நோன் தாள்,
வெண்குடை விளக்கும், விறல் கெழு வேந்தே!
பொங்கு நீர் உடுத்த இம் மலர் தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,                                 
தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர்,         5
அமர் வெங் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர்;
நினையும்காலை, நீயும் மற்றவர்க்கு
அனையை அல்லை; அடு மான் தோன்றல்!
பரந்து படு நல் இசை எய்தி, மற்று நீ                                     
உயர்ந்தோர் உலகம் எய்தி; பின்னும்                                     10
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே:
அதனால், அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்
இன்னும் கேண்மதி, இசை வெய்யோயே!
நின்ற துப்பொடு நிற் குறித்து எழுந்த                                     
எண் இல் காட்சி இளையோர் தோற்பின்,                            15
நின் பெருஞ் செல்வம் யார்க்கு எஞ்சுவையே?
அமர் வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலையின்,
இகழுநர் உவப்ப, பழி எஞ்சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல் விரைந்து   
எழுமதி; வாழ்க, நின் உள்ளம்! அழிந்தோர்க்கு                  20
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால், நன்றே வானோர்
அரும் பெறல் உலகத்து ஆன்றவர்
விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே.

திணை - வஞ்சி; துறை - துணைவஞ்சி.

அவன் மக்கண்மேற் சென்றானைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது.




(இ - ள்.) மடுத்தெழுந்த போரின்கட் கொன்ற மிகுதிபொருந்திய வலியமுயற்சியையுடைய வெண்கொற்றக்குடையான் உலகத்தை நிழல் செய்து புகழால் விளக்கும் வென்றியையுடைய வேந்தே! கிளர்ந்த நீரையுடைய கடலாற் சூழப்பட்ட இப்பரந்தவிடத்தையுடைய உலகத்தின்கண் நின்னிடத்துப் போர்செய்யவந்த இருவரையும் கருதின், பழையதாய்த் தங்கப்பட்ட வலியை யுடைய நின் பகைவேந்தராகிய சேரபாண்டியருமல்லர், போரின்கண் விரும்பிய காட்சியுடனே நின்னொடு பகையாய் வேறுபட்டெழுந்த அவ்விருவர்தாம்; நினையுங்காலத்து நீயும் அவர்க்கு அத்தன்மையையாகிய பகைவனல்லை; பகையைக் கொல்லும் யானையினையுடைய தலைவ! நீ பரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தித் தேவருலகத்தின்கட் போய்ப் பின்பு நீ ஒழித்த அரசாட்சியுரிமை அவர்க்குரித்து; ஆதலால், அப்பெற்றித்தாதலும் அறிவோய்! பெரிதும் இன்னமும் கேட்பாயாக; புகழை விரும்புவோய்; நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்திருந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடைய நின்புதல்வர் தோற்பின் நினது பெரிய செல்வத்தை அவர்க்கொழிய யாவர்க்குக் கொடுப்பை? போரை விரும்பிய செல்வ! நீ அவர்க்குத் தோற்பின் நின்னையிகழும் பகைவர் உவப்பப் பழியை உலகத்தே நிறுத்துவை; ஆதலான், ஒழிவதாக நின்னுடைய மறன்; கடிதின் விரைந்தெழுந்திருப்பாயாக; நின்னுடைய உள்ளம் வாழ்வதாக; அஞ்சினோர்க்கு அரணாகும் நினதடிநிழல் மயங்காமற் செய்தல்வேண்டும், நல்வினையை; விண்ணோரது பெறுதற்கரிய உலகத்தின்கண் அமைந்தவர் விரைந்த விருப்பத்தோடு விருந்தாக ஏற்றுக்கொள்ள-எ - று.


214
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;                         
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே:                 5
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு,
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்,                           
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;                                    10
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு,
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.

திணை - பொதுவியல்; துறை - பொருண்மொழிக்காஞ்சி.

அவன் வடக்கிருந்தான் சொற்றது

(இ - ள்.) அறவினையைச்செய்வேமோ அல்லேமோவென்று கருதி ஐயப்பாடு நீங்கார் அழுக்குச்செறிந்த காட்சிநீங்காத உள்ளத்தினையுடைய தெளிவில்லாதோர்; யானைவேட்டைக்குப்போவோன் யானையையும் எளிதாகப் பெறுவன்; குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது பெறாது வறிய கையினனாயும் வருவன்; அதனால் உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்யப்பட்ட நல்வினைக்கூற்றிலே அதனை அனுபவித்தலுண்டாமாயின் அவர்க்கு இருவினையும் செய்யப்படாத உம்பருலகத்தின்கண் இன்பம் அனுபவித்தலுங் கூடும் (பி-ம். கூட்டும்); அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சியில்லையாயின், மாறிப் பிறத்தலிலேகூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவுங்கூடும்; மாறிப்பிறவாரென்று சொல்லுவாருள ராயின் இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது புகழை நிலைபெறுத்தி வசையில்லாத உடம்பொடு கூடிநின்று இறத்தல் மிகத் தலையாயது; அதனால் எவ்வாற்றானும் நல்வினைசெய்தல் அழகிது-எ - று.


215
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை                       
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்                             5
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன்மன்னே.

திணை - பாடாண்டிணை;    துறை - இயன்மொழி.

கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார் வாராரென்ற சான்றோர்க்கு அவர் வருவாரென்று சொல்லியது,

(இ - ள்.) கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும் தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த வேளையினது வெள்ளிய பூவை வெளிய தயிரின்கட் பெய்து இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும் அவரை கொய்வார் நிறையவுண்ணும் தென்திக்கின்கட் பொதியின்மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டினுள்ளும் சேய்த்தாகிய பிசிரென்னும் ஊரிடத்தானென்று சொல்லுவார், என்னுயிரைப் பாதுகாப்போனை; அவன் எமக்குச் செல்வ முடைய காலத்து நிற்பினும் யாம் இன்னாமை யுறுங்காலத்து ஆண்டு நில்லான்-எ - று.


216
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய,
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று,                 
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்!                                 5
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே;
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர்
பேதைச் சோழன்' என்னும், சிறந்த                                       
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை,                       10
இன்னது ஓர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!

திணையும் துறையும் அவை.

அவன் வடக்கிருந்தான் பிசிராந்தையார்க்கு இடனொழிக்க வென்றது.

(இ - ள்.) ‘நின்னை அவன் கேட்டிருக்கும் அளவல்லது சிறிது பொழுதும் காண்டல்கூடாது பல்யாண்டுசெல்லத் தவறின்றாக மருவிப்போந்த உரிமையையுடையோராயினும் அரிதே தலைவ! அவ்வழுவாத கூற்றிலே படவொழுகுதல்’ என்று கருதி ஐயப்படாதொழிமின்; நிறைந்த அறிவினையுடையீர்! அவன் என்னை என்றும் இகழ்ச்சியிலனாய் இனிய குணங்களையுடையன்; பிணித்த நட்பினையுடையன்; புகழ் அழியவரூஉம் பொய்ம்மையை விரும்பான்; தனது பெயரை பிறர்க்குச் சொல்லும்பொழுது என்னுடைய பெயர் பேதைமையையுடைய சோழனென்று எனது பெயரைத் தனக்குப் பெயராகச் சொல்லும் மிக்க அன்புபட்ட உரிமையையுமுடையன்; அதற்கு மேலே இப்படி யான் துயரமுறுங்காலத்து ஆண்டு நில்லான்; இப்பொழுதே வருவன்; அவனுக்கு இடம் ஒழிக்க-எ - று.

முற்றும்


தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைப்பு:
http://www.tamilvu.org/library/libindex.htm

பிசிராந்தையார் நாடகம் இணைப்பு:
http://www.tamilvu.org/courses/degree/c011/c0114/html/c0114503.htm

விக்கிபீடியா இணைப்பு:
http://ta.wikipedia.org/s/4h7

புறநானூறு வேறு உரைக்கான பிடிஎஃப் கோப்பு பதிவிறக்க இணைப்பு
புறநானூறு


Monday, December 10, 2012

இயேசு காவியம் - கண்ணதாசன்

இயேசு காவியம் - கண்ணதாசன்

















கசப்புறு பாத்திரம்

வானி லங்கு நிலவு விழித்தது
    வைய மெங்கும் காற்று விழித்தது
கானி லந்த மலரும் விழித்தது
    கல்லி னுள்ளும் ஈரம் வடிந்தது
ஊனு டம்பு தூங்கி விழுந்தது
    உள்ள மொன்று கண்கள் திறந்தது
தானு லாவும் தோட்டம் தன்னிலே
    தர்ம தேவன் செபத்தை நினைத்தனன்!

மூன்று சீடர் முறைப்படி பின்வர
    முள்ளில் நின்று தெள்ளிய நெஞ்சினன்
ஊன்றி அந்தக் கணத்தில் உரைத்தனன்:
    "உள்ளி ருந்து உதிரம் வடிக்கிறேன்
தோன்றும் அந்தச் சாவினுக் கேற்றதோர்
    துன்பம் என்னைத் தொட்டெடுக் கின்றது
ஆன்ற நீங்கள் விழித்திருப் பீர்களே
    ஆண்ட வர்முன் செபம்செய்து மீளுவேன்!"

என்ற வாறு ஏகினன் தனிமையில்
    ஏறு மேக வானினை நோக்கினன்
நின்ற உடல்கால் நெடுந்தரை தொட்டன
    நெஞ்சம் அந்த நிலத்தினில் சாய்ந்தது!
மன்றி லாழ்ந்த துயரம் வெளிப்பட,
    "தந்தை யே!இக் கசப்புறு பாத்திரம்
சென்று போவ தாயின்உம் விருப்பமே
    சிறிதும் எந்தன் விருப்பம் இதிலிலை!


"நன்மை தீமை எதுவரு மாயினும்
    நான்கு டிக்க விரும்புவீர் நீரெனில்
முன்வி தித்த விதிப்படி மாந்துவேன்
    மூளு கின்ற யாவும்உம் செய்கையே!
என்ப தாகச் செபத்தை முடித்தபின்
    ஏற்ற தோழர் இடத்தினில் மீண்டனர்
அன்பு மிக்க தோழர்க ளோமிக
    ஆழ்ந்த தூக்கம் தன்னில் இருந்தனர்!

"உங்கள் கண்ணில் உறக்கமும் உள்ளதோ,
    உள்ளம் கூட உறங்குவ தென்னவோ?
கண்கள் கொண்டு கடவுளைக் காணுவீர்
    கனிவு மிக்க செபத்தில் இறங்குவீர்!
மங்க ளங்கள் பாடிடும் முன்னமே
    மற்ற வாத்திய ஒலிகளும் நிற்குமோ?
உங்கள் உள்ளம் உறுதியு டைத்ததே
    ஊனு டம்பே வலிமை இழந்தது!"

இன்ன கூறி மீண்டும் திரும்பினார்
    இறைநி னைந்து மண்டியிட் டோதினார்
பின்னர் அந்தச் சீடரை நோக்கினார்
    பேணு கின்ற சீடர்கள் தூங்கினார்!
சொன்ன பின்பும் தூங்கிய சீடரைத்
    தூங்க விட்டு நாதர் செபிக்கிறார்!
மின்னு வானத் தூதுவன் வந்தனன்
    மேலெ ழுந்தே ஆறுதல் கூறினன்!

சோர்வி லாது நாதன் செபித்ததும்
    துன்ப நாடி சூழ வெடித்தது
வேர்வை யோடு இரத்தம் வடிந்தது
    மேனி யெங்கும் செம்புனல் பாய்ந்தது!
தேர்வ தான தந்தை செபத்திலே
    தேவ மைந்தன் சேர்ந்து கலந்தனன்!
போர்மு கத்தின் உறுதியைக் காட்டியே
    பொன்னெ ழுத்தில் சீடர்பால் கூறுவார்:

"நேர மின்று நெருங்கியே வந்தது
    நேரும் ஒன்றை நினையில் வைப்பிரே!
ஆறும் இந்த மனுமகன் பகைவரின்
    அடிமை போலப் பிடிபடப் போகிறான்
சேரும் இந்தப் பாவிகள் வாழவே
    தேவ மைந்தன் கையடி படுகிறான்
நீரும் அந்தச் சூழ்நிலை காணவே
    நேரில் வந்தான் வஞ்சக நண்பனே!"

















வஞ்சக நண்பன்

கடவுள் மைந்தன் சொல்லி முடிக்குமுன்
    காசு பெற்ற யூதாஸ் சீடனும்
இடம றிந்து குருக்களும் வேதரும்
    இவர்தி ரட்டும் ஆட்களும் வீரரும்
தடிகள் கத்தி அம்புகள் விலங்குகள்
    தாங்கி அங்கு வந்து குவிந்தனர்!
மடைதி றந்த பகைவரைப் பார்த்ததும்
    மைந்தர் இயேசு நேர்கொண்டு நின்றனர்!

வேவு பார்க்கும் ஒருவனைக் கொண்டுதான்
    வீரர் கூட வெற்றிகள் காண்கிறார்
பாவ ஜென்மம் ஒருவன்இ லாவிடில்
    பக்தி மார்க்கம் பயனுள தல்லவே!
தேவ மைந்தன் தடயம் அறிந்ததால்
    சேர்ந்த யூதாஸ் இடத்தினைக் காட்டினன்
கோவில் பூனை புலியைப் பிடித்திடக்
    கூட்டத் தோடு வந்து விழுந்தது!

"தூய மைந்தன் போலொரு சீடரும்
    தோற்றம் தன்னில் இருப்பத னாலவர்
சாய்ந்த உடலில் மண்டியிட் டவர்தமை
    முத்த மிட்டு தலையசைப் பேன்உடன்
பாய்ந்து நீங்கள் அவரைப் பிடிக்கவும்
    பாக்கிக் காசு கையில் கொடுக்கவும்"
ஆய வார்த்தை கூறியன் றோஅவன்
    அழைத்து வந்தான் பகைவர்கள் யாரையும்!


நாதன் முன்னம் மண்டியிட் டானவன்
    "நலமே வாழ்க குருவே!" என்றனன்!
தூது சொல்ல முத்தமிட் டான்அவன்
    தூய மைந்தன் அவனிடம் சொல்கிறார்:
"மோது கின்ற அன்புடை நண்பனே!
    முத்த மிட்டுக் காட்டிக் கொடுக்கவோ
காத லோடு என்முனம் வந்துள்ளாய்?
    கடவுள் தம்மை உனக்கென வேண்டுவேன்"