Saturday, October 14, 2017

நாற்காலிக்காரார் - ந.முத்துசாமியின் நவீன நாடகம்

நாற்காலிக்காரர் 
இணைய செய்திகள்:
 நாற்காலிக்காரர் நாடகத்தில், அரசியல் அபத்தம் அதில் தோலுரித்துக்காட்டப்படுகிறது. காலத்தைக் கழிக்க சுவாரஸ்யம் தேவைப்படுகிறது. மக்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கோலிக்குண்டு விளையாடுகிறார்கள். சீட்டுக்கட்டு விளையாடுகிறார்கள். கோலிக்குண்டு, சீட்டுக்கட்டைவிடவும் சுவாரஸ்யமான விளையாட்டு தேவைப்படுகிறது. அரசியல் விளையாட்டு விளையாடலாம் எனத் தீர்மானிக்கிறார்கள் ! வாழ்க, ஒழிக கோஷம் போடுகிறார்கள். சுவாரஸ்யத்தைக் கூட்ட வெற்றி தோல்வி வேண்டும் என்கிறார்கள். அதுபொருட்டு வாக்கு கேட்கிறார்கள். வாக்குறுதி அளிக்கிறார்கள்.  வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டபின் வாக்காளன் பலியாடாகிறான். அரசியல் நடப்பின் அபத்தம் !
‘’ஒரு பார்வைக்கு வெளிப்படையாகத் தெரிகிற ஒரு அர்த்தத்தையும் இன்னொரு பார்வைக்கு அர்த்தங்கள் கிளைத்துக் கொண்டு போகிற பூடகமான வகையிலும் எழுதப்பட்டுள்ள ஒரு காட்சிப் படிமம் இது’’ என்று இளங்கோவனின் ஊடாடி நாடகத்திற்கான முன்னுரையில் ந.முத்துசாமி எழுதியிருப்பது இவரது நாற்காலிக்காரர் நாடகத்திற்கும் சாலப்பொருந்தக்கூடியதுதான்.
‘கலை’ என்ற சொல்லிற்கு ‘கலைத்துப் போடுதல்’ என்கிற அர்த்தமும் உண்டு. ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற மதிப்பீடுகளை, செய்துகொண்டிருக்கிற சமாதானங்களை நோக்கித் துல்லியமாக எறியப்பட்ட ஒரு கல்… நாற்காலிக்காரர் !
மரபிலிருந்து மாறுபட்டிருந்த ந.முத்துசாமியின் நாடகங்கள் மேடையேற்றம் காணும் வாய்ப்பற்று இருந்தன. நண்பர்கள் சிலரோடு சேர்ந்து  1977 –ல் அவர் ‘கூத்துப்பட்டறை’ எனும் நாடக அமைப்பை உருவாக்கினார். அவரது நாடகங்களை நடிப்பதற்கான பிரத்யேகமான நடிகர்கள் பயிற்சியினால் உருவாக்கம்பெறத் துவங்கினார்கள். நவீன நாடகமேடையும் உயிர்கொண்டது.
ந.முத்துசாமி எழுதிய நாடகங்களில் பிற நாடகக் குழுக்களாலும் அதிகளவில் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் நாற்காலிக்காரரும் ஒன்று. எழுதிய காலகட்டத்திலிருந்து சமகாலப் பொருத்தப்பாடுடைய நாடகம் இது.
தகவல் தளம்:http://malaigal.com/?p=7370
நாற்காலிக்காரர் நாடகம் - பகுதி-1


நாற்காலிக்காரர் நாடகம் - பகுதி-2

நாற்காலிக்காரர் நாடகம்- பகுதி-3


காணொளிகள்: Youtube தளம்

3 comments: